[இடுகையிட்டது வன்னியன் புதன், 28 ஏப்ரல், 2010]

வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது உட்படசிறிலங்கா அரசு மேற்கொண்ட பல்வேறு ஜனநாயக விரோதசெயற்பாடுகள் அதனை இனஅழிப்பை மேற்கொண்ட நாடாகஅறிவிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை முன்மொழிந்திருக்கிறதுஎ ன்று வைத்தியர். றேச்சல் ஜொய்ஸ் ( கறோ மேற்குகொன்சவேட்டீவ் அபேட்சகர்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
இனப்படுகொலை எனப்படுவது ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒருமதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லதுபகுதிபகுதியாகவோ, திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே அழித்தலாகும்.
1948 ஐ.நா. கூட்டத்தில் இனப்படுகொலையெனு ம் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும்என்ற தலைப்பில், இனப்படுகொலையின் சட்டபூர்வமான வரைவிலக்கணம்தரப்பட்டுள்ளது. அதில் 2 ஆவது சட்டத்தின்படி ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ,ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லதுபகுதிபகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் கீழ்க்கண்ட செயல்கள்இனவழிப்பு என்றும் வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்கும்.
ஒரு குழுவினரின் அங்கத்தவரைக் கொலைசெய்தல், ஆபத்து விளைவிக்கும் வகையில்காயப்படுத்தல், மனநோயை ஏற்படுத்தல், அந்தக்குழுவினரின் வாழ்க்கையைமுழுதாகவோ, பகுதிபகுதியாகவோ அழிக்கும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்குதல்,அந்தக் குழுவினரின் சந்ததி வளராது தடுக்கும் நோக்குடன் நடவடிக்கை எடுத்தல், ஒருகுழுவினரின் பிள்ளைகளை பலாத்காரமாக< /SPAN> இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்தல்ஆகியனவே அவையாகும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீதுநடாத்தப்படும் கீழ்க்கண்ட செயல்களை நான் இனவழிப்பாகக் கொள்ளப்படவேண்டும்என்று நம்புகிறேன்:-
யாழ் நூலகத்தை எரிக்கப்பட்டது, வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது, தமிழ்மக்களை தனிப்பட்ட முறையில் கடத்துவது காணமல் போகவைப்பது, தமிழைஇலங்கையில் அரச மொழியாக ஏற்க மறுத்தது, 'பாதுகாப்பு வலயம்" எனக்கூறப்பட்டபிரதேசங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு நடத்தியது, தமிழ் மக்களை இடம்பெயர்த்துபாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றியது, இடம்பெயர்ந்தமக்களை முள்வேலிக்குள் சிறைப்படுத்தியது ஆகியவையே.
மேற்கூறிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக இன அழிப்பு எனப்பிரகடனப்படுத்திஅவற்றைத் தீர்ப்பதற்கு ஐ.நா சபையின் கூட்டத்தைப் பயன்படுத்துவதற்கு தமிழ்மக்களுடன் சேர்ந்து நானும் உழைப்பேன் - என்று அவர் தெரிவித்துள் ளார்.
அமெரிக்காவை தளமாக வைத்துஇயங்கும் இனப்படுகொலையைஎதிர்க்கும் தமிழர் (ரீ.ஏ.ஜி) எனும்அமைப்பின் பிரித்தானியப்பிரதிநிதியும் 20009 ஆம் ஆண்டுஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில்சுயேட்சை அபேட்சகராக நின் று 50.000ற்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்றவருமாகிய ஜனனி ஜனநாயகம்இது பற்றி கூறுகையில்:-
'எமது இனத்துக்கு எதிராகஇடம்பெற்றிருக்கும் இனப்படுகொலைக்குச் சட்டமூலம் அங்கிகாரம் பெறும் பொருட்டுஉழைத்து வரும் நாங்கள் வைத்தியர் றேச்சலின் நிகரில்லாத ஆதரவால் மகிழ்ச்சிஅடைகிறோம். எல்லாத் தகவல்களையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அவர்இத்தகைய முடிவுக்கு வந்துள்ளார் என நான் அறிவேன். இத்தகைய முடிவுக்கு வந்தஅவர், சட்ட ரீதியல் இவ்விடயத்தை</ SPAN> அணுகத்தைரியமாகவும் உறுதியாகவும் முயற்சிசெய்வார் என்பதனையும் நான் அறிவேன்.
பிரித்தானிய அரசியற்கட்சிகள் ஒன்றும் இலங்கையின் இனப்படுகொலை பற்றி ஒருதீர்க்கமான முடிவு எடுக்காத நிலையில், றேச்சல் ஜோய்ஸ் போன்றவர்கள் த னித்துவமாகஇத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஈழத்தமிழருக்குநடக்கும் இனப்படுகொலையை இனங்கண்டு அதற்குத் தகுந்த பரிகாரம் தேடுவதற்குச்சர்வதேச அரசியல் ஒருமைப்பாடும் அனுசரணையும் எவ்வளவு முக்கியம்எ னக்கூறத்தேவையில்லை.
2009 இல் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இனப்படுகொலைநடந்திருக்கலாம் என்று கூறியிருந்த பொழுதும் றேச்சல் ஜோய்ஸின் இந்தக்கூற்று ஒருமுக்கிய விடயமாகும். சிலருக்கு இப்படிப்பட்ட நிலைப்பாட ு அவர்களின் தனிப்பட்டஅனுபவமாகும். உதாரணமாக ஒஸ்விட்ஸ் இல் இருந்து வந்த தனது மூதாதையர்களைக்கொண்ட லீஸ்கொட், இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என உறுதியுடன்நிற்கிறார்.
இல்லியோனிஸ் சட்டப்பேராசிரியரான 'பிரான்சிஸ் பொயில் " சுதந்திரம் முதல் இலங்கைஅரசாங்கங்களின் இனப்படுகொலைக்கு தமிழர்கள் இரையாகுகிறார்கள்.போஸ்னியாவில் 'றடோவன் கறட்சிக்" இனப்படுகொலைக்காக குற்ற விசாரணைக்குஉள்ளாக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அரசு சமீபத்தில் நடைபெற்ற வன்னிப்போரில்மாத ்திரம் 50.000க்கும் மேல் கொன்றொழித்தது இனப்படுகொலையாகும். என்று அவர்கூறுகிறார் - என்றார் அவர்.